பொதுக் கலந்தாய்வில் 19 குழுக்கள், தனிமனிதர்கள்

பொதுக் கலந்தாய்வில் 19 குழுக்கள், தனிமனிதர்கள்

1 mins read
34584932-da88-4e9f-bc5c-bffbe8dc5d8f
-

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அதி­பர் முறை குறித்து மறு­ஆய்வு செய்­யும் அர­சி­யல் சாசன குழு­வின் பொது கருத்துக்கேட்பு அங்கத்தில் பங்­கேற்­க­வுள்ள 19 குழுக்­கள், தனிப் பட்டவர்­களில் முன்னாள் அமைச்­சர் எஸ்.தன­பா­ல­னும் ஒரு­வர். வாய்­மொ­ழி­யாக வாதங்களை முன்வைக்க விடுக்­கப்­பட்ட அழைப்பை பாட்­டா­ளிக் கட்சி நிரா­க­ரித்­துள்­ளது. குழு­வின் முன்னால் வாய்­மொ­ழி­யாக வாதங்களை முன் வைப்­ப­தற்கு பதி­லாக இது குறித்து நாடா­ளு­மன்றத்­தில் விவா­திக்­கவே விரும்­பு­வ­தாக பாட்­டா­ளிக் கட்சி கூறி­யது.

மேலும் எழுத்­து­பூர்­வ­மாக தனது வாதங்களைக் குழு­வுக்கு அனுப்­பு­வ­தா­க­வும் அது குறிப் ­பிட்­டது. இந்த மாத­மும் அடுத்த மாத­மும் நடை­பெ­ற­வுள்ள நான்கு பொது கருத்துக்கேட்பு நிகழ்வில், தேர்ந் ­தெ­டுக்­கப்­பட்ட அதி­பர் முறைக்கு பரிந்­துரைக்­கப்­பட்­டுள்ள மாற்­றங்கள் குறித்த தங்க­ளது கருத்­து­களை 19 குழுக்­களும் தனி நபர்­களுக்­கும் முன் வைப்பர். யூரே­‌ஷிய சங்கம், 'அவேர்' எனப்படும் மகளிர் செயல், ஆய்­வுச் சங்கம் போன்ற வை இதில் இடம்­பெற்­றுள்­ளன.