நெஞ்சுவலிக்கான பராமரிப்பு பயிற்சி செயலி

நெஞ்சுவலிக்கான பராமரிப்பு பயிற்சி செயலி

1 mins read
95f4430a-2999-4376-b6f3-99bca0ede6ee
-

சுதாஸகி ராமன்

நீரிழிவு நோய், காய்ச்­சல், கீல்­வாதம் என்று பல நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மருத்­துவ உதவி வழங்­கு­வது பற்றி புதிய தாதி­யர்­களுக்­குத் தெரிந்­தி­ருந்தா­லும் நெஞ்சுவலியால் அவ­தி­யு­றும் நோயா­ளி­களுக்­கான பரா­ ம­ரிப்பு குறித்த அணு­கு­முறை­கள் பற்றி அவர்­கள் புரிந்­து­கொள்ள சிர­மப்­படு­கிறார்­கள். நெஞ்சுவலி­யுடைய நோயா­ளி­களுக்கு மருத்­துவ உதவி வழங்க மருத்­து­வ­மனை­யின் மூத்த தாதி­யர்­களையே அவர்­கள் எதிர் பார்த்திருப்பதை டான் டொக் செங் மருத்­து­வ­மனை­யின் மூத்த ஸ்டாஃப் நர்ஸ் குமாரி காயத்­திரி தேவதாஸ், 31, கவ­னித்தார்.

தாதியர் படிப்பின்­போது நெஞ்சு வலிக்­கான பரா­ம­ரிப்பு அணு­கு­முறை­களைத் தாதி­யர்­கள் கற்­றி­ருந்தா­லும் மருத்­து­வ­மனை சூழலில் நோயா­ளி­களைக் கவ­னித்து பரா­ம­ரிக்­கும் அனு­ப­வத்தைப் அவர்­கள் பெற்­றி­ருக்­க ­வில்லை என்பதை காயத்­திரி உணர்ந்தார். அவர்­களுக்­குத் தக்க தொழிற்­ப­யிற்­சி­களை அளித்து உதவ காயத்­திரி விழைந்தார்.

மூத்த ஸ்டாஃப் நர்ஸ் குமாரி காயத்­­­திரி தேவதாஸ் (வலது), நெஞ்சுவலி சமா­ளிப்பைப் பற்றிய பாவனைப் பயிற்­­­சி­­­களை அளிக்­­­கும் விளை­­­யாட்­­­டுச் செயலியை மடிக்­­­க­­­ணி­­­னி­­­யில் இயக்­­­கிக் காட்­­­டு­­­கிறார். படம்: தேசிய சுகா­­­தா­­­ரப் பரா­­­ம­­­ரிப்­­­புக் குழுமம்