'பொதுவான குறிக்கோள்கள், கோட்பாடுகள் அவசியம்'

'பொதுவான குறிக்கோள்கள், கோட்பாடுகள் அவசியம்'

1 mins read

வட்­டா­ரப் பாது­காப்­புக்கு பொதுவான குறிக்­கோள்­களும் கோட்­பாடு­களும் அவ­சி­யம் என தற்­காப்பு அமைச்­சர் டாக்டர் இங் எங் ஹென் கூறி­யுள்­ளார். கோலா­லம்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற 15வது ஆசிய தற்­காப்­புச் சேவைகள் கண்­காட்சி மற்றும் கருத்­த­ரங்கு, நான்கா­வது புத்­ரா­ஜெயா கலந்­துரை­யா­டல் ஆகி­ய­ வற்­றில் டாக்டர் இங் கலந்­து­ கொண்டார். மலேசிய தற்­காப்பு, பாது­காப்­புக் கழ­கம்­ ஏற்­பாடு செய்த புத்­ரா­ஜெயா கலந்­துரை­யா­ட­லில் துருக்­கிய தற்­காப்பு துணை அமைச்­ச­ரு­டன் இணைந்து 'மாபெரும் சக்­தி­களின் செல்­வாக்கு, வட்டார பாது­காப்­புக் கட்­டமைப்பு' எனும் தலைப்­பில் டாக்டர் இங் பேசினார். தற்­காப்பு அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள், கல்­வி­யா­ளார்­கள் ஆகியோர் ஒன்றா­கக் கூடி தற்­ காப்பு, பாது­காப்­புப் பிரச்­சினை­கள் பற்றி விவா­திக்­கும் தளமாக புத்­ரா­ஜெயா கலந்­துரை­யா­டல் விளங்­கு­ கிறது.