எந்தவித தடங்கலும் இல்லாமல் வடக்கு=தெற்கு ரயில் சேவை 100 நாட்களை எட்டியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தமது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை வடக்கு=தெற்கு ரயில் சேவை இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய அதே சமயம், டௌன்டவுன் ரயில் சேவை எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் 178 நாட்களை எட்டியுள்ளது. "ரயில் சேவையில், தடங்கல் இல்லாத 100 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. "அதாவது, அனைவரும் அனைத்தையும் சரியாகச் செய்தாக வேண்டும். "ஏதாவது ஒரு தவறு ஏற்பட்டுவிட்டால் அது தடங்கலுக்குக் காரணமாகி விடும்," என்று கோ பூன் வான் தமது பதிவில் கூறியிருந்தார்.
வடக்கு- தெற்கு ரயில் சேவை: தடங்கலற்ற 100 நாட்கள்
1 mins read

