சிறைச்சாலை அவசரநிலையைக் கையாளும் பாவனை செயல்

சிறைச்சாலை அவசரநிலையைக் கையாளும் பாவனை செயல்

1 mins read
dc9fd308-c02d-42d4-a27e-b386b1e64b1f
-

இரண்டாண்­டு­களுக்கு ஒரு முறை நடை­பெ­றும் 'ஏ‌ஷியன் பிரிசன்ஸ் லாக்­ட­வுன் சேலஞ்ச்' பயிற்சியில் சிங்கப்­பூர் சிறைச்­சாலை சேவை கள், மக்காவ் சீர்­தி­ருத்த சேவை இலாக்கா, தாய்­லாந்து சீர்­தி­ருத்தப் பிரிவு ஆகி­ய­வற்றைச் சேர்ந்த 50 அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர். இந்தப் பயிற்சியில் பங்­கேற்ற அந்த அதி­கா­ரி­கள், ஆபரேஷன் 'மேன்­ட­வுன்' எனும் போட்­டி­யில் கலந்துகொண்டனர் . அப்போது, அதிக ஆபத்­தான கைதிகளைச் சிறைச்சாலையில் இருந்து நீதி­மன்றத்­துக்கு அழைத்­துச் செல்லும் வழியில் நடத்­தப்­படும் திடீர் தாக்­கு­தலைச் சமா­ளிப்­பது போன்ற பாவனை செயலில் ஈடு­பட்­ட­னர். சாங்கி சிறைச்­சாலை­யில் நேற்­று­டன் நிறைவு பெற்ற 'மேன்­ட­வுன்' போட்­டி­யில், சிங்கப்­பூ­ரின் சிறைச்­சாலை­யின் அவ­ச­ர­கால செயல் மீட்புக் குழு முத­லி­டத்­தில் வந்தது.

ஆப்ரேஷன் 'மான்டவுன்' போட்டிக்கான பாவனை செயலின்போது உயிரிழந்தவரை கொண்டுச் செல்லும் தாய்லாந்து சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகள் (சிவப்பு தொப்பி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்