குடியிருப்பாளர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒரு பரிவுமிக்க சமூகமாக புக்கிட் பாத்தோக் தொகுதியை உருமாற்றுவோம் என்று சிங்கப்பூர் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. புக்கிட் பாத்தோக் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டி யிடும் எதிர்தரப்பு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி நேற்று செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி அத்தொகுதிக்கான திட்டங்களை பட்டியலிட்டது. அங் மோ கியோவில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமைச் செயலாளரும் அத்தொகுதிக்கான அக்கட்சி யின் தேர்தல் வேட்பாளருமான டாக்டர் சீ சூன் ஜுவான், "நான் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்குள்ள முதியவர்களுக்கும் குறைந்த வருமான குடியிருப்பாளர்களுக்கும் உதவும் வகையில் 'குடும்பம் ஒன்றைத் தத்தெடுக்கவும்' எனும் திட்டத்தை அறிமுகம் செய்வேன். "வசதியுள்ள குடும்பங்கள் இந்தப் பிரிவினருக்கு தங்கள் நேரத்தையும் வளங்களையும் தந்து உதவி அவர்களின் நல்வாழ்வுக்கு பொறுப்பேற்கும். "இதன்மூலம், புக்கிட் பாத்தோக் சமூகத்தை இன்னும் நெருக்கமாக்கி, குடியிருப்பாளர்களிடையே பிணைப்பை மேலும் வலுப்படுத்து வோம்.
சிஜ கட்சி: பரிவுமிக்க சமூகமாக மாற்றுவோம்
1 mins read
-

