புக்கிட் பாத்தோக் இடைத்தேர்லுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும். அதற்குரிய வேட்புமனு தாக்கல் நிலையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கெமிங் தொடக்கப் பள்ளிக்குள் அன்று காலை 10.00 மணி முதல் பொதுமக்களும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலிஸ் நேற்று தனது அறிக்கையில் கூறியது. புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் உள்ள கெமிங் தொடக்கப் பள்ளியில் கார் நிறுத்த அனுமதியில்லை என்றும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் அங்கு வர பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை கூறப்படு கிறது. அங்குள்ள போலிஸ் அதிகாரிகள் கூறும் ஆலோச னையைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் நிலையம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கும்
1 mins read

