இந்தோனீசியக் கடற்பகுதியில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்பூரரான 27 வயது குமாரி நியோ க்யூ பிங் வெரா அங்கு உயிரிழந்தார். ஞாயிறு அன்று இந்தோனீசியாவின் கொமொடுவின் வட கிழக்கிலுள்ள கிலி லாவா என்ற இடத்தில் முக்குளிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. தொடர்ந்து அவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல் முக்குளிப்புப் பகுதியில் நேற்றுக் காலை 10.55 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனீசியாவின் தேசிய தேடல், மீட்பு முகவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி யது. அவரது உடல் தற்போது இந்தோனீசியாவின் சிலோம் மருத்துவமனையில் உள்ளது.
சிங்கப்பூர் மாது இந்தோனீசியாவில் மரணம்
1 mins read

