பெரிய அளவிலான நீரிழிவு ஆய்வு: 2,300 பேர் தேவை

பெரிய அளவிலான நீரிழிவு ஆய்வு: 2,300 பேர் தேவை

1 mins read

தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை 'டைப் 2' வகை நீரிழிவு நோய் ஏற்­படு­வதற்­கான கார­ணத்தை அறிய மிகப்­பெ­ரிய ஆய்வை மேற்­கொள்ள உள்ளது. இந்த ஆய்வில் பங்­கேற்க 2,300 பேர் தேவைப்­படு­கின்ற­னர். அவர்­கள் நீரிழிவு நோய் இல்­லா­த­வர்­க­ளாக அல்லது நீரி­ழி­வுக்கு முந்திய நிலைமை உள்­ள­வர்­க­ளாக அல்லது ரத்­தத்­தில் சற்றுக் கூடு­த­லான சர்க்­கரை உள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவர்­கள் கேள்­வி­களுக்­குப் பதில் அளிக்க வேண்டும். மேலும் மூன்றாண்டு காலத்­துக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட வேண்டும். ஆண்டில் இரு முறை, ரத்த சர்க்­கரை அளவைக் கணக்­கெ­டுக்க தேசி­ய­பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனைக்­குச் செல்ல வேண்டும்.