சிங்கப்பூருக்கு பெரும் சவாலாக விளங்கும் இணையக்குற்றங்கள்

சிங்கப்பூருக்கு பெரும் சவாலாக விளங்கும் இணையக்குற்றங்கள்

1 mins read

இணை­யத்­தின் எல்லை­யற்ற தன்மை­யினால் வளர்ந்து வரும் இணையக் குற்­றங்கள் சிங்கப்­பூ­ரி­லும் உல­க­மெங்­கும் சட்ட அம­லாக்­கத் துறை­யி­ன­ருக்கு பெரும் சவாலை ஏற்­படுத்­து­கின்றன என்று அதிபர் டோனி டான் கெங் யாம் கூறி­யுள்­ளார். சிங்கப்­பூ­ரர்­களைக் குறிவைப்­ப­வர்­கள் நாட்­டுக்கு வெளியே இருந்து வேலை செய்­வ­தால், அவர்­களை நீதிக்கு முன் நிறுத்­து­வது சிர­ம­மாகி உள்ளது என்றார் டாக்டர் டான். போலிஸ் கேன்டோன்மண்ட் காம்ப்ளெக்சில் உள்ள குற்றப் புலனாய்­வுப் பிரிவுக்கு நேற்று வருகை மேற்­கொண்ட அதிபர் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசினார்.

வர்த்­த­கம், காதல் ஏமாற்­று­கள் போன்ற இணைய ஏமாற்­றுக் குற்­றச்­செ­யல்­கள் 2014ஐ விட 2015ல் இரட்­டிப்­பாகி இருப்­பதை அதிபர் குறிப்­பிட்­டார். "உல­கி­லுள்ள மற்ற நக­ரங்களு­டன் ஒப்­பி­டும்­போது குற்­றச்­ செ­யல்­களைத் தடுப்­ப­தில் சிங்கப்­பூர் சிறப்­பா­கச் செயல்பட்­டுள்­ளது. ஆனால், நமக்­குச் சவால்­கள் இல்லை என்று கூறிவிட முடியாது," என்றார் அதிபர் டான். மேலும், பயங்க­ர­வாத அச்­சு­றுத்­தல் சிங்கப்­பூர் போலிஸ் படைக்­குத் தொடர்ச்­சி­யான அக்­கறை­யாக உள்ளது என்பதை டாக்டர் டான் சுட்­டினார்.