தமது சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியுடன் தாம் செய்த பணிகளை வைத்து தமது தகுதியை எடை போடும்படி வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் டாக்டர் சீ சூன் ஜுவான். தாம் பல ஆண்டுகளாக முழு நேர வேலையில் இல்லை என்று வெள்ளிக்கிழமை இரவு மசெகவின் அமைச்சர் கிரேஸ் ஃபூ சாடியதற்குப் பதிலளித் தார் திரு சீ. "பணம் ஒன்று மட்டுமே அனைத்தும் இல்லை. உங்களுக்குப் பணம் வேண்டு மென்றால் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருங்கள். அமைச்சர்களுக் கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பின்பு மற்றவர்கள் எங்களைப் போல வாங்க வில்லை என்று கூறாதீர்கள். அது கேட்பதற்கே நன்றாக இல்லை," என்றும் நேற்று காலை செய்தியாளர்களிடம் கூறினார் திரு சீ.
புக்கிட் பாத்தோக்கில் நேற்று வாக்காளர்களைச் சந்தித்த திரு சீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

