மாணவருக்கு நிதி அமைச்சர் சொல்லும் நான்கு முக்கிய அம்சங்கள்

மாணவருக்கு நிதி அமைச்சர் சொல்லும் நான்கு முக்கிய அம்சங்கள்

1 mins read
fa21ba47-6dc5-4037-a2b8-2ef6b62e954d
-

சிங்கப்பூரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு முன்னேற்றிக் கொண்டுசெல்லும் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க 'எதிர்கால சிந்தனை' என்ற கருத்தரங்கு சனிக்கிழமை நடந்தது. அதில் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர். உலகமயம், தனிச்சிறப்பு, உடமை உணர்வு, பலன்தருதல் ஆகிய நான்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமானவை என்பதை அந்தக் கருத்தரங்கில் எடுத்துச் சொல்வதற்காக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தனது உரையைத் தயாரித்து வைத்திருந்தார். ஆனால் அவருக்குத் திடீரென்று சென்ற வாரம் வாதம் தாக்கியதால் அந்தக் கருத்தரங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அவருடைய செய்தியை அவருக்குப் பதிலாகத் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் அந்தக் கருத்தரங்கில் வாசித்தார்.