பாலுக்­­­காக அண்­­­ணனைக் குத்­­­தி­­­ய­­­வ­­­ருக்கு கட்டாய மனநல சிகிச்சை

பாலுக்­­­காக அண்­­­ணனைக் குத்­­­தி­­­ய­­­வ­­­ருக்கு கட்டாய மனநல சிகிச்சை

1 mins read

பால் கொண்டு வந்து தர­­­வில்லை என்­­­ப­­­தால் அண்­­­ணனைக் குத்திய 20 வயது சோ வெய் லின்னுக்கு ஈராண்­­­டு­­­கள் கட்டாய மனநல சிகிச்சை பெற வேண்டும் என தண்டனை விதிக்­­­கப்பட்­­­டுள்­­­ளது. அவர் குறிப்­­­பிட்ட ஒன்றைப் பற்றி தேவை­­­யில்­­­லா­­­மல் அதி­­­க­­­ளவு சிந்­­­தித்து மனநலப் பிரச்­­­சினைக்கு உள்­­­ளா­­­கு­­­ப­­­வர். சம்ப­­­வம் நடந்த அன்று மாலை 6 மணிக்கு வீட்­­­டுக்கு வந்த சோ வெய் லின், தாயா­­­ரி­­­டம் தமது அறைக்கு பால் கொண்டு வரச் சொன்னார்.

அந்த 55 வயது தாயார் பாலை வர­­­வேற்பு அறை மேசையில் வைத்­­­து­­­விட்டு, அதைச் சோவிடம் கொடுக்­­­கு­­­மாறு அவரது 22 வயது அண்­­­ண­­­னி­­­டம் கூறினார். ஆனால், அவர் புத்­­­த­­­கத்­­­தில் மூழ்­­­கி­­­யி­­­ருந்தார். அதனால் அண்ணன் மீது ஆத்­­­தி­­­ர­­­மடைந்த சோ, 32 சென்டி மீட்டர் நீள­­­முள்ள கத்­­­தி­­­யால் அவரது வயிற்­­­றில் குத்­­­தினார்.

அவரது அம்மா ஆம்­­­பு­­­லன்ஸை அழைத்­­­தார். அண்­­­ண­­­னுக்கு அறுவை சிகிச்சை மேற்­­­கொள்­­­ளப்­­­பட்டு, இரு நாட்கள் மருத்­­­து­­­வ­­­மனை­­­யில் தங்­­­கி­­­யி­­­ருந்தார். பிப்­­­ர­­­வரி மாதம் இச்­­­சம்ப­­­வம் நடந்தது. சோ வெய் லின் கைது செய்­­­யப்­­­பட்­­­டார். இக்­­­குற்­­­றத்­­­துக்கு இரண்டு ஆண்­­­டு­­­கள் சிறையும் $5,000 அப­­­ரா­­­த­­­மும் விதிக்­­­கப்­­­ப­­­ட­­­லாம்.