குவீன்ஸ்டவுன் பகுதியில் உள்ள மின்தூக்கி வளாகத்தில் தொலைக்காட்சி அட்டைப் பெட்டிக்குள் போடப்பட்டிருந்த $45,000 மதிப்பிலான நகைகளைக் கண்டுபிடித்த இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் அவற்றை உரியவரிடம் சேர்ப்பித்துள்ளனர். காணாமல் போன நகைகள் அதே நாளில் கிடைத்ததை எண்ணி அதன் உரிமையாளரான யோங் மகிழ்ச்சியுற்றதாக தஞ்சோங் பகார் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் (நடுவில்) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். திரு நூருல் இஸ்லாம், திரு சென்டு (சான்றிதழுடன்) எனும் அவ்விரு துப்புரவாளர்களுக்கும் திரு மெல்வின் பாராட்டுப் பத்திரம் வழங்கியதாகவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். படம்: திரு மெல்வின் யோங்கின் ஃபேஸ்புக் பக்கம்
கேட்பாரற்றுக் கிடந்த $45,000 மதிப்பிலான நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர்கள்
1 mins read
-

