மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி கேலாங் செராயில் விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 59 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று காலை 2.56 மணி அளவில் உதவிகோரி போலிசுக்கு அழைப்பு வந்தது. போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது அந்தப் பகுதியில் கார் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்ததாக போலிஸ் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். விபத்தில் எவருக்கும் காயமில்லை. ஆனால் நோன்புப் பெருநாள் அலங்காரங்களைக் கொண்ட தூண் ஒன்று பாதிக்கப்பட்டது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர் கைது
1 mins read

