தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதல் சேவை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read

சிங்கப்­பூர் ஏர்லைன்ஸ் விமா­னத்­தில் 'எகானமி' வகுப்­பில் முன்­ ப­திவு செய்த வாடிக்கை­யா­ளர்­கள் 'பிரீ­மி­யம் எகானமி' வகுப்­புக்கு மாறிக்­கொள்­வதற்­கான ஏலத்­தில் பங்­கேற்க அழைப்­பு­வி­டுக்­கப்­படு­வர். 'மைஎஸ்­கி­யூ­அப்­கி­ரேட்' எனும் இந்தப் புதிய திட்டம் படிப்­ப­டி­யாக அதன் கட்­டமைப்­பில் அறிமு­கப்­படுத்­தப்­படும் என 'கிரிஸ்­ஃப்ளை­யர்' திட்­டத்­தின் அங்கத்­தி­ன­ருக்கு அந்த நிறு­வ­னம் மின்­னஞ்சல் அனுப்­பி­ உள்­ளது. இத்­தகைய திட்டம் அண்மைக் காலங்களில் பல விமான நிறு­வ­னங்க­ளால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. உலகம் முழு­வ­தும் 30க்கும் மேற்­பட்ட விமான நிறு­வ­னங்கள் இந்த ஏலத் திட்­டத்தைச் செயல்­படுத்­து­வ­தாக வால் ஸ்திரீட் சஞ்சிகை சென்ற ஜன­வ­ரி­யில் செய்தி வெளி­யிட்டி­ருந்தது.

இந்த ஏலத் திட்­டத்­துக்கு வாடிக்கை­யா­ளர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் விதம் விமான நிறு­வ­னத்­துக்கு ஏற்ப வேறு­படு­கிறது. சில நிறு­வ­னங்கள் தனி­யா­கப் பயணம் செய்­ப­வர்­களை­யும் வேறு சில நிறு­வ­னங்கள் அடிக்­கடி விமானப் பயணம் மேற்­கொள்­வர்­களை­யும் தேர்ந்­தெ­டுக்­ கின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தத் திட்­டத்­துக்­குத் தேர்ந்­தெ­டுப்­ப­வர்­களை பயண தேதிக்கு ஏழு நாட்­களுக்கு முன்­பா­கத் தொடர்­பு­கொள்­ளும். பயணத் துக்கு 48 மணி நேரத்­துக்கு முன்­ன­தாக வாடிக்கை­யா­ளர்­களுக்கு ஏலத்தின் முடிவு தெரி­விக்­கப்­படும் என சிங்கப்­பூர் ஏர்லைன்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.