நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு இஸ்தானா புல்வெளி திறந்துவிடப் பட்டது. மாணவர்கள், இளையர்கள், சிறுவர்கள் கலந்துகொண்ட ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்றன. குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் திரண்டு வந்த பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதிபர் டோனி டான் கெங் யாம் தம் துணைவியாருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறுவர், மாணவர்களுடன் அளவளாவினார். இஸ்தானாவில் அமைக்கப்பட்டிருந்த கிளிக் கூடாரத்தில் இருந்த பல வண்ணக் கிளிகளைக் கையிலேந்தி மகிழ்ந்தார். அருகில் அவரது துணைவியார் மேரி டான் (இடமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நோன்புப் பெருநாளில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இஸ்தானா
1 mins read
-

