வாம்போ கூட்டுரிமை வீடுகளின் ஐந்தாவது மாடியிலிருந்து சன்னல் கண்ணாடி நேற்று மதியம் நொறுங்கி விழுந்தது. பக்கத்து கூட்டுரிமை வீட்டில் வசித்து வந்த 31 வயது ஷுலி சுடர்ருடின் முதலில் "பெரிய உலோகம் விழுந்தது போல" கேட்டதாக கூறினார். அரைமணி நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே நடந்தபோது 'சிறிய நீர்வீழ்ச்சி ஏற்படுத்தும் ஒலி கேட்ட தாகவும் மேலே அண்ணாந்து பார்க்கையில் அந்தக் கட்டடத்தின் நீச்சல் குளத்திலிருந்தது நீர் கொட்டுவதை உணர்ந்தார். சிறிது நேரத்தில் இன்னொரு கண்ணாடியும் விழுந்தது என்றார். சாலை எங்கும் நீர் தெளிக்கப்பட்டு காணப்பட்டது.
ஐந்தாவது மாடியிலிருந்து சன்னல் கண்ணாடி நொறுங்கி விழுந்தது
1 mins read
-

