நீதிமன்ற அவமதிப்புக்கு எழுத்துபூர்வ சட்ட வடிவம்

நீதிமன்ற அவமதிப்புக்கு எழுத்துபூர்வ சட்ட வடிவம்

1 mins read

நீதி­மன்ற அவ­ம­திப்பு என்ன என்பதை விளக்­கும் சட்டப் பிரி­வு­கள் எழுத்து வடிவில் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் சட்­டத்­துக்­கான மூத்த துணை அமைச்­சர் இந்­தி­ராணி ராஜாவால் தாக்கல் செய்­யப்­பட்­டது. இதன்­படி, நீதித்­துறை தொடர்­பா­கத் தெரி­விக்­கக்­கூ­டிய கருத்­து­கள் எழுத்து வடிவில் சட்­ட­மாக்­கப்­படும். குற்­ற­வி­யல் சட்­டப்­பி­ரி­வு­கள் நாடா­ளு­மன்றத்­தால் எழுத்து வடிவம் பெற்­றுள்­ளன. ஆனால் நீதி­மன்ற அவ­ம­திப்பு என்பது அதற்கு விதி­வி­லக்­காக தொன்­று­தொட்டு வந்த பாரம்ப­ரி­யக் குற்­ற­ மா­கக் கரு­தப்­படு­கிறது. இந்த­நிலை இப்போது மாற­வுள்­ளது.

நாடா­ளு­மன்றத்­தில் நேற்று தாக்கல் செய்­யப்­பட்ட நீதித்­துறை நிர்வாக (பாது­காப்பு) சட்டம் அதற்கு வகை செய்­கிறது. இந்தச் சட்டம் நீதி­மன்ற அவ­ம­திப்பு என்ன என்­பதைத் தெளிவாக விளக்­கு­கிறது. எனினும் பெரும்பா­லும் இச்­சட்­டத்­தில் பெரிய மாற்­ற­மில்லை என்று செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்த சட்ட அமைச்­சர் கா.சண்­மு­கம், இச்­சட்­டத்­தினால் ஏற்­ப­டக்­கூ­டிய மூன்று நன்மை­களை விளக்­கினார்.