முன்னணித் தனியார் கல்லூரிகளில் ஒன்றான 'பிஎஸ்பி அகாடமி' என்னும் கல்விக் கழகம் $15 மில்லியன் செலவில் தனது புதிய வளாகம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது. மெரினா ஸ்குவேரில் 100,000 சதுர அடியில் இரண்டு மாடிக் கட்டடங்களுடன் அந்த வளாகம் அடுத்த ஆண்டு (2017) மே மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது. வர்த்தகம் மற்றும் தொடர்பு, கணக்கியலும் நிதியும், ஆங்கில மொழித் தேர்வு பயிற்சி போன்றவற்றுக்கான வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 7,000 மாணவர்கள் அந்தப் புதிய வளாகத்தில் பயில்வார்கள். இப்போது பிஎஸ்பி, 147,000 சதுரடி அளவுள்ள வளாகத்தை தியோங் பாருவிலும் சிறிய வளா கத்தை ஷென்டன் வேயிலும் கொண்டுள்ளது. கழகத்தின் மேலாண்மை செயற்குழுத் தலைவரான திரு விவேகானந்தா சின்னையா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்தார்
'பிஎஸ்பி'யின் புதிய வளாகம்
1 mins read

