பங்கு வர்த்தகம் தடைபட்டது

பங்கு வர்த்தகம் தடைபட்டது

1 mins read

சிங்கப்­பூர் பங்­குச் சந்தையில் தொழில்­நுட்­பக் கோளா­றால் நேற்று தடை ஏற்­பட்­டது. காலை 11.30 மணிக்கு தடை செய்­யப்­படு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது. தொழில்நுட்­பக் கோளா­று­கள் சரி­செய்­யப்­பட்டு 2.00 மீண்­டும் பங்­குச் சந்தையைத் திறக்க முயற்சி எடுக்­கப்­பட்­டது. அது இய­லாத கார­ணத்­தால் மீண்­டும் 4.00 மணிக்கு திறக்க முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. அது­வும் இய­லா­த­தால் நேற்றைய பங்­குச் சந்தை மீண்­டும் திறக்­கப்­பட மாட்­டாது என்று பங்­குச் சந்தை அறி­வித்­தது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மென்­பொ­ருள் கோளா­றா­லும் அதே ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மின்­சா­ரக் கோளா­றா­லும் பங்குச் சந்தையில் தடை ஏற்பட்டது.