துவாஸ் சோதனைச்சாவடியில் 2 கூடாரங்கள் விழுந்தன; இருவர் காயம், கடும் நெரிசல்

துவாஸ் சோதனைச்சாவடியில் 2 கூடாரங்கள் விழுந்தன; இருவர் காயம், கடும் நெரிசல்

2 mins read
339890bb-59ba-4c77-988e-0e9efac18885
-

துவாஸ் சோதனைச் சாவ­டி­யில் இரண்டு கூடா­ரங்கள் விழுந்த­தால் நேற்றுக் காலை ஜோகூ­ரி­லி­ருந்து சிங்கப்­பூ­ருக்­கு வரும் வழியில் கடுமை­யான போக்­கு ­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்­டது. நேற்று அதிகாலை 5.35 மணி­ய­ள­வில் நேர்ந்த விபத்து குறித்து குடி­நுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வாகனமோட்­டி களுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­ தி­ருந்தது. துவாஸ் சோதனைச் ­சா­வ­டியைத் தவிர்க்­கு­மாறு ஆலோ­சனையை­யும் அது வழங்­கி­யது.

காலை 10 மணி­ய­ள­வில் வெளி­யிட்ட தக­வ­லில் பய­ணி­களுக்கு ஏற்­பட்ட சிர­மத்­துக்கு மன்­னிப்­புக் கோரிய ஆணையம், பலத்த காற்று, கனமழை கார­ண­மாக கூடாரம் விழுந்த­தா­கக் குறிப்­ பிட்­டது. "போக்­கு­வ­ரத்து நில­வ­ரம் படிப்­ப­டி­யாக சீரடைந்து வரு­வ­தா­க­வும் கீழே விழுந்த கூடா­ரங்களை அகற்­றும் பணிகள் மேற்­கொள் ­ளப்­பட்டி­ருப்­ப­தா­க­வும் ஆணை யம் தனது அறிக்கை­யில் தெரிவித்தது. கூடாரங்கள் விழுந்த­தில் மலேசிய மோட்­டார்சைக்­கி­ளோட்டி ஒரு­வ­ரும் அவரது வாக­னத்­தின் பின் இருக்கை­யில் அமர்ந்­தி­ருந்த ஒரு­வ­ரும் காயம் அடைந்த­தால் அவர்­கள் இங் டெங் ஃபோங் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

நெரி­ச­லில் சிக்கிய பய­ணி­கள் தங்கள் 'ஃபேஸ்­புக்' பக்­கங்களில் படங்களைப் பதி­வேற்­றி­ய­து­டன் மோசமான காலநிலை விபத்­துக்­குக் காரணம் எனவும் குறிப்­பிட் ­டி­ருந்த­னர். இணை­யப்­பக்­கங்கள் வழியாக போக்­கு­வ­ரத்து நில­வ­ரத்தை அறிந்து பய­ணத்தைத் தொடங்­கு­ மாறு ஆணையம் வாக­ன­மோட்­டி ­களுக்கு அறி­வு­றுத்­தி­யது. இடிந்து விழுந்த கூடா­ரங்களின் பாகங்கள் அகற்­றப்­பட்­டு ­விட்­ட­தா­க­வும் நடைமுறை சீரடைந்­தி­ருப்­ப­தா­க­வும் ஆணையம் நேற்று பிற்­ப­கல் 1.45 மணி­ய­ள­வில் தெரி­வித்­தது.

பலத்த காற்று, கனமழை காரணமாக நேற்று காலை துவாஸ் சோதனைச்சாவடியில் இரண்டு கூடாரங்கள் விழுந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: சுதென் ஷெமுவேலின் ஃபேஸ்புக் பக்கம் 2016-08-04 05:52:00 +0800