பாசிர் ரிஸ், பொங்கோல் வட்டாரவாசிகள் அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் 'கோ எஹெட்' பேருந்துச் சேவைகளில் (படம்) பயணம் செய்யலாம். சிங்கப்பூரின் ஆகப் புதிய பேருந்து நிறுவனமான 'கோ எஹெட்', லோயாங் பேருந்துச் சேவை தொகுப்பை 25 பேருந்துச் சேவைகளுடன் தொடங் கும். முதல் கட்டமாக 13 பேருந்துச் சேவைகள் அறிமுகம் காணும். பின்னர், இரண்டாம் கட்டமாக 11 பேருந்துச் சேவைகள் செப்டம்பர் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப் படும். அதன் 25வது பேருந்துச் சேவை அடுத்த ஆண்டு அறிமு கமாகும். இந்தத் தகவல்களை நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து 'கோ எஹெட்' நிறுவனம் நேற்று அறிவித்தது. பேருந்துச் சேவைகளின் தரத்தை மேம் படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் பேருந்து தொழில்துறையில் மறுசீரமைப் புத் திட்டத்தின்கீழ்ப் பேருந்து சேவை களை வழங்கும் இரண்டாவது வெளிநாட்டு நிறுவனம் 'கோ எஹெட்.' பிரிட்டனின் 'டவர் டிரான்சிட்' நிறுவனம் அதன் சேவையை மே மாதம் தொடங் கியது. "கோ எஹெட் நிறுவனத்தின் இந்தச் சேவை மாற்ற காலகட்டத்தில் பேருந்து நிறுவனங்களுடன் இணைந்து பயணிகளுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் குறைப்பதுடன் சுமுகமான பயணத்தை வழங்கக் கடமை கொண்டுள்ளோம்," என்றார் நிலப்போக்குவரத்து ஆணையத் தின் தலைமை நிர்வாகி சியூ மென் லியோங். பயணப் பாதைகளையும் பயண நேர அட்டவணைகளையும் பற்றி அறிந்துகொள்ள பேருந்து களிலும் போக்குவரத்து முனை யங்களிலும் வைக்கப்படவிருக் கும் விளம்பர வெளியீடுகளை பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று 'கோ எஹெட்' நிறுவனம் தெரிவித்தது.
செப். 4ல் தொடங்கும் 'கோ எஹெட்' பேருந்துச் சேவைகள்
2 mins read
-

