ஜூரோங் துறைமுகம்: திறன்மிகு செயல்பாட்டுக்கு புதிய வசதிகள்

ஜூரோங் துறைமுகம்: திறன்மிகு செயல்பாட்டுக்கு புதிய வசதிகள்

1 mins read

ஜூரோங் துறை­மு­கம், பல­த­ரப்­பட்ட சரக்­கு­களை ஒரே இடத்­தில் இறக்­க­வும் ஏற்­ற­வும் வச­தி­கொண்ட புதிய முனை­யத்தை நேற்று அறி­மு­கம் செய்தது. துறை­மு­கத்­திற்கு வரும் பொது சரக்­கு­கள், கொள்­க­லன்கள் கொண்ட கப்­பல்­கள் இனி வெவ்வேறு முனை­யங்களுக்குச் செல்ல வேண்­டி­ய­தில்லை. இந்த மாற்றம் ஜூரோங் துறை­மு­கத்­தில் மட்டும் செயல்­படுத்தப்படும். சிங்கப்­பூர் துறைமுக ஆணை­யத்­தில் கொள்­க­லன்களில் சரக்­கு­கள் ஏற்றும் பணி தொடர்ந்து நடை­பெ­றும். புதிய முனை­யத்­தில் சரக்­கு­களைக் கையாளும் செயல்திறன் 50% உயரும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. கப்­பல்­களில் இருந்து சரக்­கு­களை இறக்­கு­வதற்­கும் குறைவான நேரமே தேவைப்­படும். கொள்­க­லன்களை­யும் பிற சரக்­கு­களை­யும் கையா­ளு­வதற்கு ஏற்ற சிறப்பு உப­க­ர­ணங்கள் புதிய முனை­யத்­தில் உள்ள பாரந் தூக்கிகளில் பொருத்­தப்­பட்­டு உள்­ளன.