சிறிய நடுத்தர நிறுவனமான 'மினி என்வைரன்மண்ட் சர்வீசஸ்' (எம்இஎஸ்) தனது ஊழியர்களுடன் தேசிய தினப் பற்று றுதி நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. முன்னாள் நாடாளுமன்ற நாயகர் அப்துல்லா தர்முகி, தமிழ் முரசின் தலைவர் திரு எஸ் சந்திரதாஸ் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எம்இஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதி காரி திரு ஜலீலும் ஊழியர்களும் தேசிய கீதத்தைப் பாடி, உறுதிமொழி எடுத்துக்கொண்டு தேசிய தினப் பாடல்கள் பாடினர்.
முதன்முறையாக இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது எம்இஎஸ் நிறுவனம். 24 நான்கு மணி நேரமும் நிறுவனம் செயல்படுவதால் பல இனத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கூட ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைந்ததாக கூறினார் எம்இஎஸ் நிறு வனத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் திரு யூசோஃப் லதீஃப்.
முதல்முறையாக நடந்த எம்இஎஸ் நிறுவனம் தேசிய நாள் கொண்டாட்டம். செய்தி, படம்: திமத்தி டேவிட்

