$200,000 பண மோசடி முறியடிப்பு

$200,000 பண மோசடி முறியடிப்பு

2 mins read
5511d644-6ffe-4c13-a24f-6bd9c0a2be4b
-

'மேபேங்க்' ஊழி­யர்­களின் முயற்­சி­யால் $200,000 பண மோசடி சம்ப­வம் ஒன்று முறி­ய­ டிக்­கப்­பட்­டது. போலிஸ் நேற்று இந்தத்த­க­வலை வெளி­யிட்­டது. 72 வயது மூதாட்டி ஒருவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி, வங்கி கணக்கு ஒன்­றுக்கு பணம் மாற்று சேவைக்­காக பீப்­பள்ஸ் பார்க் செண்­ட­ரில் அமைந்­துள்ள 'மேபேங்க்' வங்­கிக்கு சென்றார். குடி­நுழை­வுச் சிக்கலை எதிர் நோக்­கி­யி­ருந்த தமது நண்­ப­ருக்கு உதவ வேண்­டி­யி­ருப்­ப­தாக அவர் வங்கி ஊழி­யர்­களி­டம் கூறினார். மூதாட்­டி­யி­டம் இருந்து விவ­ரத்தை அறிந்த வங்கி ஊழி­யர்­க­ளான குமாரி டோரின் ஓங்குக்கும் குமாரி கிரிஸ்­டின் டிங்குக்கும் இவ்­வ­ளவு தொகை மாற்றம் பற்றிய சந்­தே­கம் எழுந்தது. உடனே போலி­ஸுக்கு தகவல் தந்த­னர்.

வர்த்­தக விவ­கா­ரத்துறை மத்திய பிரிவு அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட விசா­ரணை­யில் பாதிக்­கப்பட்ட மூதாட்டி முகம் தெரியாத நபர் ஒரு­வ­ரு­டன் ஃபேஸ்­புக், 'வாட்ஸ்­அப்' வாயிலாக 5 வரு­டங்களுக்கு மேலாக தொடர்­பில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த நப­ருக்கு $75,500 பணம் மாற்றம் செய்­துள்­ள­ளார். போலிஸ் விசாரணை தொடர்­கிறது. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு போலிஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இணை­யத்­தில் சந்­திக்­கும் முகம் தெரியாத நபர்­களை நம்பி அவர்­களுக்கு பணம் உதவி செய்ய முற்படாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்­கு­கள் பற்றிய விவ­ரங்களை மற்ற­வ­ர்­களு­டன் தேவை­யில்­லா­மல் பகிர்ந்து கொள்­ளா­தீர்­கள். வெளி­யூ­ரில் இருப்­ப­வர் தான் பிரச்சனை­யில் இருப்­ப­தாகக் கூறி தனக்குப் பண உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், போலிஸிடம் முதலில் தெரி வியுங்கள்; பண மாற்றத்தில் ஈடுபடாதீர்கள் போன்ற ஆலோசனைகளைப் போலிஸ் கூறியது.