தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோரை வேலையில் அமர்த்தும் விகிதம் உயர்வு

1 mins read

சிங்கப்­பூ­ரில் முதி­யோ­ருக்கு மறுவேலை வாய்ப்பு வழங்­கும் சட்டம் அம­லா­வதற்கு கிட்ட­தட்ட ஓர் ஆண்டு இருக்­கும் நிலையில், தொழிற் சங்கங்களைச் சார்ந்த நான்கில் மூன்று பங்கு நிறு­வ­னங்கள் 65 வய­துக்கு மேற்­பட்ட முதி­யோ­ருக்கு மறு வேலைவாய்ப்பு வழங்­கும் பணியைத் தொடங்கி விட்டன. இந்த விகிதம் கடந்த ஆண்டைக் காட்­டி­லும் இரண்டு மடங்கு உயர்ந்­துள்­ள­தாக தொழி­லா­ளர் இயக்­கம் நேற்று தெரி­வித்­தது. சிங்கப்­பூ­ரில் மறு வேலைவாய்ப்பு வயது 65லிருந்து 67ஆக அடுத்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர உள்ளது. தற்­போதைய நிலையில் 62 வயதை எட்டும் தகு­தி­யுள்ள ஊழி­யர்­களுக்கு 65 வய­து­வரை மறு வேலை­வாய்ப்பு வழங்க நிறு­வ­னங்கள் கடமைப்­பட்­டுள்­ளன.

இது பற்றிக் கூறிய தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­ஸின் தலைமைச் செய­லா­ளர் ஹெங் சீ ஹாவ், "இது ஒரு நல்ல முன்­னேற்­றம்,'' என்று குறிப்­பிட்­டார். ''சிங்கப்­பூ­ரில் ஊழியர் அணி சிறியது. விரி­வடைய எண்ணும் நிறு­வ­னங்கள் ஊழி­யர்­கள் கிடைப்­பது சிர­ம­மாக இருப்­ப­தாக கூறு­கின்றன. இதில் அனு­ப­வம் வாய்ந்த ஊழி­யர்­கள் கிடைப்­பது மேலும் சிர­ம­மான பணி," என்றார் அவர். "மற்ற நாடுகள் முதிர்ச்சி அடைந்த ஊழி­யர்­கள் சீக்­கி­ர­மாக ஓய்வு பெற்றால் அவர்­களுக்கு மாற்றாக மற்ற நல்ல ஊழி­யர்­கள் கிடைப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல என்பதை உணர்ந்­துள்­ளன,'' என்றும் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.