தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட தலைவர்கள் இணக்கம்

1 mins read
e9e5977d-761f-4ae9-a197-70d10cb841bf
-

போரா­ளி­களின் கைரேகை உள்­ளிட்ட 'பயோ­மெட்­ரிக்' தக­வல்­களைப் பரி­மா­றிக்­கொள்­வது, தீவிர­வாத­ம­ய­மா­தலைத் தடுப்­ப­தற்­கான சிறந்த நடை­முறை­களைப் பகிர்ந்­து­கொள்­வது ஆகிய இரண்­டு அம்சங்கள் குறித்து சிங்கப்­பூர், மலே­சி­யத் தலை­வர்­கள் கலந்­துரை­யாடி உள்ளனர். பாலியில் நேற்று நடை­பெற்ற பயங்க­ர­வாதத்­துக்கு எதிரான அனைத்­து­ல­கக் கூட்­டத்­திற்கு இடையே மலேசிய துணைப் பிர­த­ம­ரும் உள்துறை அமைச்­ச­ரு­ மான டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமா­டி­யு­டன் இரு­த­ரப்­புக் கூட்டம் ஒன்றில் சட்ட, உள்துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கலந்­துரை­யா­டினார்.

தென்­கிழக்கு ஆசி­யா­வில் நிலவும் பயங்க­ர­வாத நிலை குறித்து விவா­தித்த அவர்­கள், மலேசியா, இந்­தோ­னீ­சியா, இதர அண்டை நாடுகள் ஆகி­ய­வற்­றின் பாது­காப்பு, புலனாய்­வுத் துறை அமைப்­பு­களுக்­கிடையே ஒத்­துழைப்பை விரி­வு­படுத்­து­வதற்­கான நட­வ­டிக்கை­கள் குறித்­தும் பேசினர். சிங்கப்­பூரைக் குறிவைத்து பயங்க­ர­வாதத் தாக்­கு­தல் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த ஆறு பேரை இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள் சென்ற வாரம் பாத்­தா­மில் கைது செய்­த­தன் தொடர்­பில் இந்த விவாதங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக உள்துறை அமைச்­ சின் அறிக்கை தெரி­வித்­தது. இந்­தோ­னீ­சி­யா­வின் அர­சி­யல், சட்டம், பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­சர் மென்கோ விரான்­டோ­வி­டம் உரை­யா­டி­ய­போது இவ்விரு அம்­சங்கள் குறித்­தும் அக்கறை எழுப்­பினார் திரு சண்­மு­கம்.

இந்­தோ­னீ­சி­யா­வின் அர­சி­யல், சட்டம், பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­சர் மென்கோ விரான்­டோ­வுடன் கலந்துரையாடும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்