சிங்கப்பூரின் 50 ஆண்டுகால வளர்ச்சியில் இந்திய சமூகம் ஆற்றிய பங்கை எடுத்துரைக்கும் நூல் ஒன்று நேற்று முன்தினம் அறிமுகம் கண்டது. '50 Years of Indian Community in Singapore' எனும் தலைப் பிலான நூலை பொதுத் தூதர் பேராசிரியர் டாமி கோ இந்திய மரபுடைமை நிலையத்தில் வெளியிட்டுப் பேசினார். "கல்வியைப் பொறுத்தவரை இந்தியர்கள் நல்ல தேர்ச்சி கண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண் டில் 35 விழுக்காட்டு இந்தியர்கள் மேல்நிலை கல்வித் தேர்ச்சி பெற்றனர். இது தேசிய சராசரி அளவை விட சுமார் 12% அதிகம். "இந்தியர்கள் பலர் சட்டத்துறையிலும் பொதுத் துறையிலும் முக்கிய பொறுப்புகளில் பதவி வகிக்கிறார்கள். இவர்களின் வெற்றியை நாம் கொண்டாட வேண்டும்," என்றார் பேராசிரியர் டாமி கோ.
'வோர்ல்ட் சைன்டிஃபிக்' பதிப்பகம் வெளியிட்ட நூலில் மொத்தம் 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியிலும் கலை வளர்ச்சியிலும் இந்தியர்களின் பங்கு, பார்சிகள், பாகிஸ்தானிய சமூகங்களின் வரலாறு பற்றிய கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. பற்பல துறை வல்லுநர்கள் நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை எழுதியுள்ளனர். முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் முன்னுரை வழங்கியுள்ளார். முதலில் சிங்கப்பூரின் சீன, மலாய்/முஸ்லிம் சமூகங்கள் பற்றிய நூல்கள் வெளியிடப்பட்டன. அவற்றுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இங்குள்ள இந்திய சமூகம் குறித்த இந்த நூல் அறிமுகம் கண்டுள்ளது.
நூலாசிரியர்களுள் ஒருவரான பொதுத் தூதர் திரு கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

