'பாதுகாப்பாக மோட்டார்சைக்கிளை ஓட்டுக 2016' இயக்கம் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சியையொட்டி நேற்று தொடங்கப்பட்டது. போக்கு வரத்து போலிசும் சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு மன்றமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த ஆண்டு நிலப்போக்குவரத்து ஆணையம், வேலையிடப் பாதுகாப்பு சுகாதார மன்றம், வேலையிடப் பாதுகாப்பு சுகாதாரக் கழகம் ஆகியவை போக்குவரத்து போலிசுடன் இணைந்து பங்காற்றும். 'பாதுகாப்புக் கவசம் அணிவோம்; பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்' என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.
மோட்டார்சைக்கிளோட்டிகள் அவர்களின் பின் இருக்கைப் பயணிகள் ஆகியோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு செயல்பட இந்த இயக்கம் உதவும். இந்த ஆண்டு பொருள் விநியோக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பாதுகாப்புக் கவசம் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வார்கள் என்ற உறுதிமொழியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக் கின்றன. பாதுகாப்பான பயணத்தை மோட்டார் சைக்கிளோட்டிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண் டிய அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய விளக்குக் கம்பப் பதாகைகள் தீவு முழுவதும் வைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

