மற்ற இனத்தவர் நலனிலும் அக்கறை

மற்ற இனத்தவர் நலனிலும் அக்கறை

1 mins read

சிங்கப்­பூ­ரில் பல்வேறு இனத்­த­வர் தங்க­ளது கலாசார, சமய நட­வ­டிக்கை­களை மேற்­கொள்­ளும்­போது மற்ற இனத்­த­வ­ரின் நலனை எண்ணிப் பார்ப்­ப­வர்­க­ளா­க­வும் உள்­ள­னர். அதற்கு உதா­ர­ண­மாக, ஏழாவது மாதத் திரு­வி­ழாவைக் கொண்டா­டும் சீனர்­கள் திறந்த வெளி­களில் நறு­ம­ணக் காகி­தங்களை எரிப்­ப­தற்­குப் பதிலாக பிரத்­தி­யே­க­மாக வடி­வமைக்­கப்­பட்ட அடுப்­பு­களில் எரிக்­கின்ற­னர் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறினார். அக்­கம்பக்­கத்­தா­ருக்கு இடையூறு விளை­விக்­கா­மல் இருப்­ப­தற்­காக முஸ்­லிம்­கள் பள்­ளி­வா­சல்­களில் தொழுகை மேற்­கொள்­வ­தற்­கான அழைப்பை குறைவான சத்­தத்­தில் விடுப்­பதை­யும் இந்­துக்­கள் தைப்­பூ­சத் திரு­வி­ழா­வில் பக்­தர்­கள் செல்லும் வழியில் நிர்­ண­யிக்­கப்­பட்ட சில இடங்களில் மட்டும் இசைக் கரு­வி­களை இசைப்­பதை­யும் திரு லீ குறிப்­பிட்­டார்.

இன நல்­லி­ணக்­கத்­தின் முக்­கி­யத்­து­வத்தையும் பிர­த­மர் லீ கோடிட்­டுக் காட்­டினார். "அனை­வரை­யும் உள்­ள­டக்­கிய பல இனச் சமூ­கத்­தின் முக்­கி­யத்­து­வத்தை­யும் சமுதாய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டிக்­காப்­ப­தற்­காக சம­ர­சம் செய்­ய­வேண்­டி­யி­ருப்­பதை­யும் சீன சமூகம் உள்­ளு­ணர்­வு­டன் புரிந்­துள்­ளது. அனைத்து இனத்­தி­ன­ருக்­கும் இது இரண்டா­வது இயல்­பா­கவே அமைந்­துள்­ளது," என்றும் திரு லீ விளக்­கினார்.