பயங்கரவாதத்தை முறியடிக்க சமூகப் பிணைப்பும் பொறுப்புணர்வும்

பயங்கரவாதத்தை முறியடிக்க சமூகப் பிணைப்பும் பொறுப்புணர்வும்

1 mins read

பயங்க­ர­வாத மிரட்­டல் வளர்ந்­து­வ­ரு­வது குறித்த இரு­ளார்ந்த நிதர்­ச­னத்தை­யும் அத்­தகைய தாக்­கு­தல் நிகழ்ந்தால் சமூக ஒற்­றுமை­யில் நேரக்­கூ­டிய விளை­வு­கள் குறித்­தும் தேசிய தினப் பேரணி உரையில் பிர­த­மர் லீ சியன் லூங் பேசினார். "பயங்க­ர­வா­தி­கள் வெளி­நாட்டைச் சேர்ந்த­வர்­கள் என்றால் நாம் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு சமா­ளிப்­பது எளிதாக இருக்­க­லாம். ஆனால் அந்தப் பயங்க­ர­வாதி சிங்கப்­பூ­ர­ராக இருந்­து­விட்­டால் நமது பல இனச் சமூ­கத்­திற்கு ஆழ­மான நெருக்­கடி ஏற்­பட்­டு­வி­டும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

பயங்க­ர­வாதத் தாக்­கு­தல்­கள் நடந்த நாடு­களில் மக்கள் இரு­வி­த­மாக எதிர்­வினை புரிந்­துள்­ள­னர்: ஒற்­றுமையை வெளிப்­படுத்தி அல்லது பயம், நம்­பிக்கை­யின்மை­யின் உச்­சத்தை வெளிப்­படுத்தி. "சிங்கப்­பூ­ரில் எது நிகழும் என்பதே கேள்வி," என்றார் திரு லீ. "நாம் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு நின்று சேர்ந்து தீர்வு காண்பதே அதற்­குப் பதிலாக இருக்­கிறது. தாக்­கு­தல் நிகழ்­வதற்கு முன்பாக, தற்போது நாம் எந்த அள­வுக்கு நம்மைத் தயார்ப்­படுத்தி இருக்­கி­றோம் என்­பதைப் பொறுத்தே அது அமையும். நம்­பிக்கையை உரு­வாக்க, ஒற்­றுமையை வலுப்­படுத்த, நமக்­கிடை­யே­யான பொதுவான அம்­சங்களை விரி­வு­படுத்தி பரா­ம­ரிக்க நம்மைத் தயார்ப்­படுத்­திக்­கொள்ள வேண்டும். அதனால் நாம் உள்­ளு­ணர்­வால் ஒரே மக்­க­ளாக உணர்­வோம்," என்றார் திரு லீ.