சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனமும் எஸ்பிஎச் அறநிறுவனமும் இணைந்து சமூக உண்டியலுக்கு $350,000 வழங்கியுள்ளது. இதன் தொடர்பான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று எஸ்பிஎச் நியூஸ் செண்டரில் நடைபெற்றது. இந்தத் தொகையிலிருந்து $150,000 வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உடற்குறையுள்ள, சிறப்பு தேவைகளுடைய மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கல்வி உதவி நிதிக்கு வழங்கப்படும். மீதமுள்ள $200,000 தொகையிலிருந்து $100,000, முதியோர் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சேவையாற்றும் 10 அறக்கட்டளைக்கு வழங்கப்படும். எஞ்சிய $100,000 வசதிகுறைந்த உடற்குறையுள்ள பிள்ளைகளுக்கான 10 அறநிறுவனங்களுக்கு வழங்கப்படும். எஸ்பிஎச் நிறுவனம் எஸ்பிஎச் அறநிறுவனம் ஆகியவற்றின் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் சிறப்பு விருந்தினராக நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் 300 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமூக உண்டியலுக்கு எஸ்பிஎச் $350,000 நன்கொடை
1 mins read

