சிங்கப்பூரில், கடந்த வாரம் 222 புதிய டெங்கி சம்பவங்கள் பதிவாயின என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. அதற்கு முந்திய வாரம் 198 டெங்கி சம்பவங்கள் பதிவாயின. சென்ற வாரம் பதிவான டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 அதிகம். சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திங்கட்கிழமை ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை 39 புதிய சம்பவங்கள் பதிவாகியி ருந்தன. டெங்கி சம்பவங்கள் உச்சத்தில் இருப்பதால், வரும் மாதங்க ளில் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிக்கும் என்றும் வாரியம் எச்சரித்தது.
இதுவரை 10,730 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை எழுவர் டெங்கி பாதிப்பால் மரணம் அடைந்துள்ளனர். ஒப்புநோக்க, கடந்த ஆண்டில் நால்வர் உயிர் இழந்தனர். ஆக அண்மைய நிலவரப்படி 46 டெங்கி பாதிப்புள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவற்றில் 11 இடங்கள் அதிக பாதிப்புள்ளவையாக கருதப்படுகின்றன. தெம்பனீஸ் அவென்யூ 8= ஐ சுற்றியுள்ள தெம்பனீஸ் ஸ்திரிட் 81, 83, 84 ஆகியவை, ஆக அதிகமாக டெங்கிக் காய்ச்சல் பரவும் இடங்கள் என்று கூறப்பட்டது.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் தெலுக் குராவ் வட்டாரத்தில் இதுவரை 103 டெங்கி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய டெங்கி சம்பவங்கள் ஏதும் அந்த இடத்தில் பதிவாகவில்லை. அந்த வட்டாரம் 21 நாள் கவனக்கண்காணிப்பில் இருக்கிறது. சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூரில் டெங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டக் கூடும் என்று எச்சரித்துள்ளன.

