வட்டப்பாதை ரயில் நிலையங்களான கெண்ட் ரிஜ், ஹாவ் பார் வில்லா, பாசிர் பாஞ்சாங், லாப்ரடார் பார்க் ஆகியவற்றில் நேற்று மாலை 7 முதல் 9 வரை கைத்தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன. வட்ட ரயில் பாதையின் சேவை யில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை பிரச்சினை குறித்த ஆய்வுக்காக தொலைபேசி சேவை சமிக்ஞைகள் துண்டிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. புலன் விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது சுரங்கப் பாதையில் பயணிகள் கைத் தொலைபேசிகளைப் பயன் படுத்த முடியாது என்று ஆணையம் கூறியிருந்தது. வட்ட ரயில் பாதையில் நேற்றுக் காலை நேரத்திலும் தாமதம் ஏற்பட்டது. ரயில் சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் சேவையில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணாததே இதற்கான காரணம்.
வட்ட ரயில் சேவையில் தொலைபேசி சேவை துண்டிப்பு
1 mins read
-

