அதி­க­மா­னோர் ஹஜ் பயணம் மேற்­கொள்ள வாய்ப்பு

அதி­க­மா­னோர் ஹஜ் பயணம் மேற்­கொள்ள வாய்ப்பு

1 mins read

ஹஜ் யாத்திரை மேற்­கொள்­வதற்கு சிங்கப்­பூர் கூடு­த­லாக 120 இடங்களை வரும் ஆண்­டு­களில் பெறும் என்று முஸ்லிம் விவ­கா­ரங்களுக்­கான அமைச்­சர் யாக்கூப் இப்­ரா­ஹிம் தெரி­வித்திருக்கிறார். இதற்­கான இரு கார­ணங்களை அமைச்­சர் முன்வைத்­தார். ஒன்று, சிங்கப்­பூ­ரின் மக்கள் தொகை அதி­க­ரித்து இருப்­பதை சவூதி அதி­கா­ரி­கள் புரிந்­து­கொண்­டுள்­ள­னர். மற்றது முன்னைய சிங்கப்­பூர் ஹஜ் பய­ணி­கள் நாட்டின் நற்­பெ­யரைக் கட்­டிக்­காத்து வந்­துள்­ள­னர் என்றார். ஹஜ் பய­ணத்­துக்­குக் "காத்­தி­ருக்­கும் காலம் தற்போது 15 ஆண்­டு­க­ளாக உள்ளது. சமூ­கத்­தில் அதிக எதிர்­பார்ப்பு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்" என்றார் டாக்டர் யாக்கூப். சாங்கி விமா­ன நிலையத்­தில் 467 பேர் அடங்­கிய பெரிய அள­வி­லான ஹஜ் பய­ணி­களை நேற்று சவூதி அரே­பி­யா­வுக்கு அமைச்­சர் வழி­ய­னுப்பி வைத்தார்.

இந்த ஆண்டு சிங்கப்­பூர் மொத்தம் 680 பய­ணி­களை ஹஜ் பய­ணத்­துக்கு அனுப்­பு­கிறது. இதில் 90% முதல் முறை­யா­கச் செல்­ப­வர்­கள். அவர்­களு­டன் முயிஸை சேர்ந்த 21 அதிகாரி­களும் செல்வர். அவர்­கள் மருத்­துவ, நல­வாழ்வு சேவைகளை வழங்­கு­வார்கள். கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ஹஜ் பய­ணத்­துக்கு சிங்கப்­பூர் அர­சாங்கம் அதிக இடங்களை சவூதி அரே­பி­யா­வி­டம் கேட்டு வரு­கிறது.