ஜென்டிங் விபத்­தில் சிக்கிய சிங்கப்­பூ­ரர் மரணம்

ஜென்டிங் விபத்­தில் சிக்கிய சிங்கப்­பூ­ரர் மரணம்

2 mins read
f68491cb-6f99-40d3-86ee-f0d05c9dba18
-

ஜென்டிங் ஹைலண்ட்ஸ் சென்று திரும்­பும் வழியில் சென்ற வாரம் விபத்­தில் சிக்கி, பலத்த காய­மடைந்த 62 வயது சிங்கப்­பூ­ரர் ஞாயிறு காலையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார். ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த அந்த விபத்­தில் திரு லிம் சியா திய­னுக்கு பலத்த மூளைக் காயம் ஏற்­பட்­டது. அவருக்கு கோலா­லம்­பூர் பொது மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்தது என்று கொம்பாக் போலிஸ் தலைமை அதிகாரி பெர்மானா செய்­தி நிறுவனத்திடம் கூறினார். 12 பய­ணி­களு­டன் ஜென்டிங் ஹைலண்ட்­ஸில் இருந்து சிங்கப்­பூ­ருக்கு திரும்­பிக் கொண்டிருந்த கிராஸ்­லேண்ட் சுற்­றுப்­ப­ய­ணப் பேருந்து சாலையைப் பிரிக்­கும் தடுப்­பில் மோதி­ய­தில் தலை­கீ­ழா­கக் கவிழ்ந்தது. 12 பய­ணி­களில் 9 பேர் சிங்கப்­பூ­ரர்­கள். அவர்­கள் அனை­வ­ரும் விபத்­தில் காய­மடைந்த­னர்.

செப்­டம்பர் முதல் தேதி அன்று கோலா­லம்­பூர் பொது மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­படு­வதற்கு முன்­ன­தாக, திரு லிம்­முக்கு பென்டோங் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. ஞாயிறு அன்று திரு லிம்மை சிங்கப்­பூ­ருக்கு ஆம்­பு­லன்ஸ் வண்­டி­யில் அழைத்து வர அவரது குடும்பத்­தி­னர் திட்ட மிட்­டி­ருந்த­னர். ஆனால் கடுமை­யான காயங்கள் அவரது உயிரைப் பறித்­து­விட்­டன. அவரது உடல் ஞாயிறு இரவு சிங்கப்­பூ­ருக்­குக் கொண்டுவரப்­பட்­டது. இதற்­கிடையே, கோலா­லம்­பூர் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு சிங்கப்­பூ­ர­ரான 52 வயது திரு ஆர். மனோ­க­ர­னின் உடல் நிலைமை­யும் மோசமாக உள்ளது. அவரை சிங்கப்­பூ­ருக்கு சிகிச்சைக்கு அழைத்து வர அவரது குடும்பத்­தி­னர் விரும்­பு­கின்ற­னர். ஆனால் அதற்கு மருத்­து­வர்­கள் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. அவரது இரு சிறு­நீ­ர­கங்களும் செயல் இழந்­து­விட்­ட­தாக அவ­ரு­டன் இருக்­கும் அவரது உற­வி­னர் வி.சந்­தி­ர­லேகா தெரி­வித்­தார்.

முடி திருத்­தரான திரு மனோ­க­ர­னுக்கு விபத்­தில் ஒரு கை உடைந்த­து­டன் மணிக்­கட்டு எலும்­பும் முறிந்தது. நுரை­யீ­ர­லி­லும் ஓட்டை ஏற்­பட்­டுள்­ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவ­ருக்கு இன்னும் நினைவு திரும்ப­வில்லை.

சென்ற புதன்கிழமை சாலையைப் பிரிக்கும் சுவரில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து. படம்: தி ஸ்டார்