மேலும் 8 பேருக்கு 'ஸிக்கா'

மேலும் 8 பேருக்கு 'ஸிக்கா'

1 mins read
fe077c1c-c598-402e-ab2b-4d87552d30ce
-

சிங்கப்­பூ­ரில் மேலும் எட்டு பேருக்கு ஸிக்கா பர­வி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று இந்தத் தகவல் வெளி­யா­னது. சென்ற மாதம் 27ஆம் தேதி சிங்கப்­பூ­ருக்­குள்­ளேயே பரவிய 'ஸிக்கா' கிருமித் தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்தக் கிருமித் தொற்று முதன்­மு­த­லாக அல்­ஜு­னிட் கிர­செண்ட் பகு­தி­யில் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து நேற்று பிற்­ப­கல் மூன்று மணி வரை மொத்தம் 341 பேர் 'ஸிக்கா'வால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­ பட்­டது. சிங்கப்­பூ­ரில் 'ஸிக்கா' அபாயம் இருக்­கக்­கூ­டிய ஏழு பகு­தி­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. அது பற்றிய தகவலை தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் http://www.nea.gov.sg/zika-cl­u­s­t­e­rs என்ற இணையப் பக்­கத்­தில் காணலாம். 'ஸிக்கா' தொற்­றினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் குறித்த தினசரி தகவல்கள் அந்த இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப் ­படு­கின்றன.

பீ‌ஷான் ஸ்ட்ரீட் 12ல் கொசு மருந்தடிக்கும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய ஊழியர். படம்: எஸ்டி