தமிழ் முரசில் மலேசிய ஊடக, கல்விக் குழு

தமிழ் முரசில் மலேசிய ஊடக, கல்விக் குழு

2 mins read
4cf62987-07a3-40f2-bab4-81a60d8b8993
-

சிங்கப்­­­பூர்-மலேசியா தமிழ் மொழி­­­பெ­­­யர்ப்­­­புப் பரி­­­மாற்­­­றுத் திட்­டத்­தின் ஓர் அங்க­மாக மலேசிய அர­சாங்கத்­தின் செய்தி நிறு­வ­ன­மான பெர்னாமா, மலேசிய தமிழ்ப் பத்­தி­ரிகை­க­ளான தமிழ் நேசன், மக்கள் ஓசை, வானொ­லி­ நிறுவனங்க­ளான டி.எச்.ஆர்.ராகா, மின்னல் எஃப்.எம், 'ஓம்' தமிழ் இணையத் தொலை­­­க்காட்­­சி ஆகி­ய­வற்றைச் சேர்ந்த ஆசி­ரி­யர்­கள், செய்­தி­யா­ளர்­களு­டன் மலாயா பல்­கலைக்­க­ழ­கம், ஜோகூர் ஆசி­ரி­யர் பயிற்­சிக் கல்­லூ­ரியைச் சேர்ந்த கல்­வி­யா­ளர்­களும் நேற்று தமிழ் முரசு அலு­வ­ல­கத்­துக்கு வருகை­ய­ளித்­த­னர். அவர்­களு­டன் நாடா­ளு­மன்றத்­தின் மொழித் துறைத் தலைவர் அ.பழ­னி­யப்­பன், தகவல் தொடர்பு அமைச்­சின் தமிழ் மொழிப் பிரிவின் அதி­கா­ரி­களும் வந்த­னர். தமிழ் முரசின் மொழி பெயர்ப்பு முறைகள், செய்­தி­யாக்­கம், பக்க உரு­வாக்­கம், செய்தித் தேர்வு போன்ற செயல்­பாடு­கள் பற்றித் தெரிந்­துகொண்ட­னர்.

"சிங்கப்­பூ­ரின் ஊடகச் செயல்­பாடு­களை நேரில் கண்ட­றி­வது இதுவே முதல் முறை," என்ற மின்னல் எஃப்.எம். படைப்­பா­ளர் ரவீந்­தி­ரன், சிங்கப்­பூ­ரின் தமிழ்ச் சூழல் பற்றி அறிந்துகொள்ள இந்தப் பயணம் வழி வகுத்தது," என்றார். தமிழ் மொழி எல்லா நாட்டுத் தமிழர்களையும் ஒன்றிணைக் கிறது என்ற மலாயா பல்­கலைக்­க­ழக விரி­வுரை­யா­ளர் திரு சுப்­பி­ர­மணி, "இத்­தகைய முயற்­சி­கள் இரு நாட்டு ஊட­கங் களுக்­கு­மிடையே நட்புப் பாலமாக அமை­கிறது," என்றார்.

கடந்த 10 ஆண்டுகளாக டிஎச்ஆர் ராகா வானொலியில் படைப்பாளராகப் பணியாற்றும் ரேவதி, இத்தகைய பரிமாற்றுத் திட்டங்கள் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ப் புழக்கம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள உதவுகின்றன என்றார். தமிழ் நேசன் செய்தித்தாளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் அதன் ஆசிரியர் கே.பத்மநாபன். "செய்தித்துறையில் பணிபுரி பவர்கள் நேரம், காலம் பார்க்க முடியாது. ஆனால், பல விஷ யங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இத்துறை மிகவும் உயர்ந்த ஒரு துறை," என்றார் அவர்.

மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு எஸ்.சுப்பிரமணி, தமிழ் நேசன் ஆசிரியர் திரு கே.பத்மநாபன், மக்கள் ஓசை செய்தியாளர் சுரேந்திரன் சுந்தரராஜ், மின்னல் எஃப்.எம் படைப்பாளர் ரவீந்திரன் சண்முகம் ஆகியோர் தமிழ் முரசின் ஆசிரியர் குழுவினருடன் உரையாடுகின்றனர். படம்: எஸ்.பி.பட்டு