கனடாவில் சிங்கப்பூர் மாணவர் காயம்

கனடாவில் சிங்கப்பூர் மாணவர் காயம்

2 mins read
1a001c00-9415-44c5-9f68-4db3b2b9947c
-

தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்ததால் சிங்கப்பூர் மாணவரைக் காவல் துறையினரின் நாய் கடித்துக் காதை கிழித்து விட்டது. கனடாவில் படித்துவரும் 26 வயது விக்னேஷ் சுப்பிரமணியம் தமக்கு ஒன்றும் தெரியாது என்று பலமுறை அலறி கூச்சலிட்டார். ஆனால் அவரது அலறல் யார் காதிலும் விழவில்லை. கனடாவின் பிரிட்டிஷ் கொலம் பியா நகரில் உள்ள நியூ வெஸ்ட் மின்ஸ்டெரில் திங்கட்கிழமை பிற்பகல் (சிங்கப்பூர் நேரப்படி செவ் வாய்க்கிழமை காலை) காரைத் துரத்தி பல சந்தேக நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தபோது விக் னேஷ் பிரச்சினையில் சிக்கினார். கடந்த சனிக்கிழமை ஈஸ்ட் வான்கூவரில் உள்ள வீட்டில் ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்ட சம்பவம் தொடர் பில் காவல்துறையினர் அத்தகைய அதிரடி நடவடிக்கையில் இறங்கி யிருந்தனர்.

அப்போது எச்சரிக்கை ஒலியை எழுப்பிக் கொண்டே ஒரு வெள்ளை நிறக் காரை மடக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்த விக்னேஷ் கார் மீது வெள்ளை நிறக் கார் மோதியது. இதனால் காரிலிருந்து இறங் கிய விக்னேஷ் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குள் நாய் கடித்துவிட்டது. "வெள்ளை நிற அகுரா காரிலிருந்து புகை வெளியே கிளம் பியதைப் பார்த்தேன். உடனே காரில் இருப்பது நல்லதல்ல என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. காரிலிருந்து இறங்கியதும் சிலர் கத்துவதைக் கேட்டேன். பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்த இருக் கைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அதன் பிறகு நாய் கடித்தது மட்டுமே எனக்குத் தெரியும்," என்று கனடாவின் குளோபல் நியூசுக்கு அளித்த பேட்டியில் விக்னேஷ் கூறியிருந்தார்.