இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் மாட்டிக்கொண்டு தவித்த ஆடவர்

இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் மாட்டிக்கொண்டு தவித்த ஆடவர்

1 mins read

ஹவ்காங் அவென்யூ 9ல் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் இரு அடுக்குப் பேருந்துக்கு அடியில் ஆடவர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு மாட்டிக்கொண்டார். காலை 10.30 மணி அளவில் அந்தப் பாதசாரி மீது பேருந்து எண் 72 மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த 51 வயது ஆடவரின் வலது கால் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதிகாரிகளால் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட அந்த ஆடவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.