பணிப்பெண்ணைப் பட்டினிப்போட்ட மாது மனநோயால் பாதிக்கப்பட்டவர்

பணிப்பெண்ணைப் பட்டினிப்போட்ட மாது மனநோயால் பாதிக்கப்பட்டவர்

1 mins read
a6ddb1b3-505c-4a4b-9b34-cb16f4f765ad
-

பணிப்பெண்ணைப் பட்டினிப் போட்ட இல்லத்தரசியான சோங் சூய் ஃபூன் Obsessive Compulsive Disorder எனுப்படும் மனநோயாலும் உணவு உண்பது தொடர்பான மனநோயாலும் பாதிக்கப்பட்டவர் என்று மனநல மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர். திருவாட்டி தெல்மா ஒயாசான் காவிடான் என்ற அந்தப் பணிப்பெண்ணை சோங்கும் அவரது கணவரான லிம் சூன் ஹோங்கும் சேர்ந்து பட்டினிப்போட்டது கடந்த மார்ச் மாதம் நிரூபணமானது. திருவாட்டி தெல்மா 15 மாதங்களில் ஏறத்தாழ 20 கிலோ எடை குறைந்தார்.

மனநோய் காரணமாக சோங் பணிப்பெண்ணைப் பட்டினி போட்டார் என்பதை ஏற்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை இன்று தொடர்கிறது. மனநலக் கழகத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் ஸ்டீவன் பாங் இன்று சாட்சியம் அளிப்பார்.

பணிப்பெண்ணுக்கு உணவு தர மறுத்த சோங் சூய் ஃபூன். படம்: தி நியூபேப்பர்