வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டின் குப்பைத் தொட்டியில் இருந்து விழுந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து உள்ளார். நேற்றுக் காலை 10.10 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஜாலான் ரூமா திங்கி, புளோக் 8ல் சம்பவம் நிகழ்ந் துள்ளது. மேலே இருந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. ஒருவர் கொள்ளக்கூடிய குப்பைத் தொட்டிக்குள் 20 வயதுகளை உடைய ஆடவர் ஒருவர் காயமடைந்து இருந் தார் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அதிகாரிகள் அந்தக் கூண்டை வெட்டி காயமடைந்தவரை மீட்டனர். வேலையிட, தீ பாதுகாப்பு ஆலோசனை நிறுவனம் ஒன்றின் ஃபேஸ்புக் தகவலின் படி, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவர் சாயம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அறியப்படுகிறது. அவர் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குப்பைத் தொட்டியில் விழுந்து ஊழியர் காயம்
1 mins read

