முதல் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக முகாம்களில் முறையற்ற நடைமுறைகளை ஏற் பாடு செய்ததற்காக 30 மூத்த மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரவர் குற்றங்களைப் பொறுத்து ஒரு பருவ காலத்திற்கு இடைநீக்கம், $2,000 அபராதம், 100 மணி நேரம் வரையிலான கட்டாய சமூக சேவை போன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் நடந்த அந்த அறிமுக முகாம் நடவடிக்கைகள் குறித்து சுமார் 400 மூத்த மாணவர்கள், புதிய மாணவர்களிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழு கூறியது.
30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை
1 mins read

