30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை

30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை

1 mins read

முதல் ஆண்டு மாண­வர்­களுக்­கான அறிமுக முகாம்­களில் முறையற்ற நடை­முறை­களை ஏற் பாடு செய்­த­தற்­காக 30 மூத்த மாண­வர்­கள் மீது தேசிய பல்­கலைக்­க­ழ­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அவரவர் குற்றங்களைப் பொறுத்து ஒரு பருவ காலத்­திற்கு இடை­நீக்­கம், $2,000 அப­ரா­தம், 100 மணி நேரம் வரை­யி­லான கட்டாய சமூக சேவை போன்ற தண்டனை­கள் விதிக்­கப்­பட்­டன. கடந்த ஜூலை மாதம் நடந்த அந்த அறிமுக முகாம் நட­வ­டிக்கை­கள் குறித்து சுமார் 400 மூத்த மாண­வர்­கள், புதிய மாண­வர்­களி­டம் விசாரணை மேற்­ கொள்­ளப்­பட்­ட­தாகப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் ஒழுங்­கு­முறை நட­வ­டிக்கைக் குழு கூறியது.