புதிய வரவுடன் பொலிவான தீபாவளி

புதிய வரவுடன் பொலிவான தீபாவளி

2 mins read
cf619e06-c6f7-4a6b-b24f-66d0453a5743
-

முஹம்­மது ஃபைரோஸ்

சிங்கப்­பூ­ரின் பொன்விழா ஆண்டில் மண­ வாழ்க்கையைத் தொடங்­கிய செம்ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்ரம் நாய­ருக்கு சென்ற ஆண்டு தலைத் தீபா­வ­ளி­யாக இருந்தா­லும் இவ்­வாண்டு புது வரவான மகள் இந்­தி­ரா­வு­ட­னும் குடும்பத்­தா­ரு­ட­னும் மகிழ்ச்­சி­க­ர­மாக தீபா­வ­ளியை அவர் கொண்டா­டு­கிறார். ஓராண்டா­கக் காத­லித்த குமாரி ஃபெய் ஓங்கை சென்ற ஆண்டு மணந்தார் திரு விக்ரம் நாயர். கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் விக்ரம்-=ஃபெய் தம்ப­திக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஒரு வய­தா­கும் மகள் இந்­தி­ரா­வு­டன் தீபா­வ­ளியை வர­வேற்­கும் இவர்­களுக்கு இரு­ த­ரப்­புக் குடும்பத்­தா­ரு­டன் இனிய நாளைக் கழிப்­ப­தற்கான சிறந்த வாய்ப்­பாக இது அமை­கிறது.

பொதுவாக இவர் தீபா­வ­ளியை நண்­பர்­களு­ட­னும் செம்ப­வாங் குழுத்­தொ­குதி குடி­யி­ருப்­பா­ளர்­களு­ட­னும் கொண்டா­டு­வது வழக்­கம். அட்­மி­ரல்ட்டி வட்­டா­ரத்­தில் வசிக்­கும் இத்­தம்ப­தி­யி­னர், யீ‌ஷூனில் உள்ள புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோவி­லுக்­குச் சென்று வணங்கி இன்றைய தீபா­வ­ளிக் கொண்டாட்­டத்தைச் சிறப்­பாகத் தொடங்க­ உள்­ள­னர். சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் கோவி­லுக்கு வழக்­க­மா­கச் செல்லும் திருமதி ஃபெய், இன்று புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ரம­ணி­யர் கோவி­லுக்­குக் கண­வ­ரு­டன் செல்வது குறித்து உற்­சா­கத்­து­டன் இருக்­ கிறார்.

இவ்வார­ இ­று­தியில் மகள் இந்­தி­ரா­வின் முதல் பிறந்த­நாளைக் கொண்டா­டு­வது இந்தத் தம்ப­திக்கு மட்­டற்ற மகிழ்ச்­சியைத் தரு­கிறது. "இந்துக் கட­வுளைப் பிர­தி­ ப­லிக்­கும் விதத்­தில் எங்கள் மகளுக்கு இந்திரா என்று பெயர் சூட்­டி­னோம். இந்த மங்க­ள­க­ர­மான தரு­ணத்­தில் குழந்தை­யின் பிறந்த­நாளைக் கொண்டா­டு­வது ஆனந்தத்தைத் தரு­கிறது," என்றார் திருமதி ஃபெய், 39. அத்­து­டன், தம் தந்தை­யின் பிறந்த­நாளை­யும் இன்று கொண்டா­டு­வ­தில் பூரிப்பு அடை­கிறார் திரு விக்ரம். இரு தரப்பைச் சேர்ந்த குடும்பத்­தா­ரும் மதிய உணவுக்காக உண­வ­கம் ஒன்றில் ஒன்­று­கூடத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

தீபாவளி போன்ற விழாக்­ கா­லங்களில் அனை­வ­ரும் நேரம் ஒதுக்கி ஒன்­றிணைந்து அகம­கிழ முடி­வ­தாக இத்­தம்பதி கூறினர். திரு விக்­ர­மின் தாயா­ருடைய குடும்பத்­தி­னர் கிறிஸ்­துவ சம­யத்தைச் சேர்ந்த­வர்­கள். அவரது தந்தை­யா­ரின் குடும்பத்­தி­னர் இந்து சம­யத்­தி­னர். எனவே, இளமைப் பரு­வத்­தி­லி­ருந்தே தீபாவளி, கிறிஸ்­மஸ் பண்­டிகை­களை இவர் கொண்டா­டு­வது வழக்­கம். புதிய வரவான இந்­தி­ரா­வுக்கு இருதரப்பு குடும்பத்தாரின் ஆசியைப் பெற்றுத்தர விரும்பும் விக்ரம், ஃபெய் தம்ப­தி­யி­னர் இத்­தீ­பா­வ­ளியை முன்­னிட்டு குடும்ப ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சியை­ மிகவும் ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கின்ற­னர்.

மகள் இந்திரா (வலது) கொண்டாடும் முதல் தீபாவளி இது என்பதாலும் தந்தையின் பிறந்தநாள் என்பதாலும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் திரு விக்ரம் நாயர், அவரது மனைவி ஃபெய் ஓங். படம்: திமத்தி டேவிட்