பயங்கரவாதம் தொடர்பான இளையர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

பயங்கரவாதம் தொடர்பான இளையர் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

1 mins read
1a6e17c3-0764-4bf6-a92a-0663254ccc49
-

பயங்க­ர­வாத மிரட்­டல்­கள் பற்­றி­யும் இந்த மிரட்­டல்­க­ளால் சமூ­கத்­திற்கு ஏற்­படும் பாதிப்­பு­கள் பற்­றி­யும் இளை­யர்­களிடையே விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தும் நோக்கில் கருத்­த­ரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'நாம் அனைவரும் இணைந்து நிற்போம்' என்ற தலைப்­பில் கருத்­த­ரங்கு நடை­பெற்­றது. மார்­சி­லிங்- யூ டீ குழுத்­ தொ­குதியின் ஏற்­பாட்­டில் நடைப்­பெற்ற இந்தக் கருத்­த­ரங்­கில் யூ டீ தொகு­தி­யின் நாட­ளு­மன்ற உறுப்­பி­னர் அலெக்ஸ் யாம் கலந்து கொண்டு பேசினார். மார்­சி­லிங் - யூ டீ குழுத்­ தொ­கு­தி­யில் அமைந்­துள்ள பள்­ளி­கள், கல்வி நிலை­யங்கள் ஆகி­ய­வற்­றில் பயிலும் 300க்கு மேற்­பட்ட இளை­யர்­களும் சமூகத் தலை­வர்­களும் இந்தக் கருத்­த­ரங்­கில் கலந்­து­ கொண்ட­னர்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட மார்­சி­லிங்- யூ டீ குழுத்­ தொ­குதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து) திரு ஒங் டெங் கூன், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கூப், திரு அலெக்ஸ் யாம். படம்: பெரித்தா ஹரியான்