தேசிய பதிவுச் சட்டத்தில் மாற்றம்: கண்விழிப் படலப் பதிவு தொழில்நுட்பம்

தேசிய பதிவுச் சட்டத்தில் மாற்றம்: கண்விழிப் படலப் பதிவு தொழில்நுட்பம்

1 mins read
b5ef25df-931f-4a96-9120-1279692898e5
-

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் அடுத்த ஆண்டிலிருந்து சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் கண்விழிப் படலங்களின் படங்களைப் (iris images) பதிவு செய்ய உள்ளது என்று உள்துறை அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூர் பயணிகள் இனிமேல் தங்களது கண்விழிப் படலப் படங்களைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளில் உள்ள தானியங்கி சோதனை இயந்திரத் தில் தங்கள் அடையாளத்தை உறுதிசெய்து கொள்ளலாம்.

தேசிய பதிவுச் சட்டத் திருத்தம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய திரு லீ, இத்தகைய தொழில் நுட்பம் நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் 2000மாம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். இந்த கண்விழிப் படலப் படங் கள் விரல் ரேகைகளைவிட நிரந் தரமானவை. ஏனெனில், விரல் ரேகைகள் காலப்போக்கில் அழிந்து போகக் கூடியவை, உதாரணமாக ஒருவர் உடல் உழைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் என்று அவர் சொன்னார்.