கூட்டுச்சதியில் ஈடுபட்ட இரண்டு ருமேனியர்களுக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. யுனைட்டெட் ஓவர்சீஸ் வங்கியின் தானியங்கி ரொக்க இயந்திரம் (ஏடிஎம்) வழி இருவரும் $75,150 பணத்தைத் திருடினார்கள். ஸ்டெஃபன் யூகன் என்ற 38 வயது தொழில்நுட்பருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட 54 குற்றச்சாட்டுகளில் பத்தை ஒப்புக்கொண்டார். சதியில் ஈடுபட்ட இன்னொருவரான 45 வயது எட்ரியன் கிரிஸ்டியன் கொன்சிரோவ் தன் மீது சுமத்தப்பட்ட 101 குற்றச்சாட்டுகளில் இருபதை ஒப்புக்கொண்டார். அவருக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ருமேனியர்களுக்குச் சிறை
1 mins read

