சுவிஸ் பேங்க் பிஎஸ்ஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் யாக் இயூ சீக்கு நேற்று 18 வாரச் சிறையும் $24,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தன்மீது சுமத்தப் பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மலேசிய அரசாங்கத்தின் 1MDB முதலீட்டு அமைப்பு தொடர்பில் நடைபெறும் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைப் பற்றி தெரி விக்கவில்லை என்பதையும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் அவர் மீது எழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
முன்னாள் தனியார் வங்கியாளருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை
1 mins read

