மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒய்வுபெற்ற மருத்துவருமான டாக்டர் டான் செங் போக் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் பங்கெடுக்க இயலாமல் போனது பற்றி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். சாய் சீ ரோட்டில் வசதி குறைந்த குடும்பங்களுக்காக நேற்று நடைபெற்ற அறநிதி நிகழ்ச்சிக்குப் பின் டாக்டர் டான் செய்தியாளர்களிடம் பேசினார். "நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என்பதை மறுக்க இயலாது. வாழ்க்கையில் நாம் விரும்பும் தெரிவுகள் பல உள்ளன. நாம் ஒரு போதும் அவற்றை விட்டுக்கொடுப் பதில்லை," என்றார் அவர். சில மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காகத்தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட எண்ணம் கொண்டிருந்ததாக டாக்டர் டான் சொன்னார். - முழு விவரம் - அச்சுப் பிரதியில்
டான் செங் போக்: ஏமாற்றம்தான்; இருப்பினும்
1 mins read
-

